Tuesday, September 28, 2010

‘எந்திரனின் அபார முன்பதிவு சாதனை..!’ திரையரங்குகள் என்ன கூறுகின்றன? – நமது Exclusive Advance Booking Report 3

ந்திரன் ரிசர்வேஷன் சாதனை குறித்து நீங்கள் செய்திகள் படித்திருந்தாலும் பார்த்திருந்தாலும் எந்திரன் ரிசர்வேஷன் எப்படி? பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்? என சம்பந்தப்பட்ட திரையரங்குகளையே கேட்டுவிடுவதென களமிறங்கினோம்.

ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது எந்திரன் முன்பதிவிற்கு. இத்துனை தியேட்டர்களில் திரையிட்டும் எந்திரன் படத்திற்கான டிக்கட்டுகளை ரசிகர்கள் அள்ளி சென்றுவிட்டனர். தயாரிப்பு தரப்பிலும் exhibitors தரப்பிலும் மகிழ்ச்சியில் திளைத்துவருகின்றனர்.

DSC 9354 640x465  ‘எந்திரனின் அபார முன்பதிவு சாதனை..!’ திரையரங்குகள் என்ன கூறுகின்றன? –  நமது Exclusive Advance Booking Report 3

பண்டிகைகால ரயில்வே டிக்கட்டுக்களை போல ஆன்லைன் டிக்கட்டுகள் பறந்துகொண்டிருக்கின்றன. புக் செய்ய முடிவு செய்து, க்ளிக் செய்வதற்கு முன்பாகவே தீர்ந்துபோய் பல தியேட்டர்களில் ஆன்லைன் பதிவு பட்டையை கிளப்பியிருக்கிறது. (சென்னையில் மட்டும் 42 தியேட்டர்ஸ் சார். 42 தியேட்டர்ஸ். ஞாபகம் வெச்சுகோங்க!)

நாம் முதலில் பேசியது தேவி திரையரங்கம்.

ரிசர்வேஷன் தினத்தன்று மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து, வரிசையில் கால் கடுக்க நின்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது முதல் நாள் டிக்கட்டுகளை அள்ளி வழங்கிய திரையரங்குகளில் தேவியும் ஒன்று. தேவி, தேவி பாரடைஸ் என இரண்டு திரையரங்குகளில் எந்திரன் இங்கு திரையிடப்பட்டுள்ளது.

காலை நான்கு மணிமுதலே இங்கு ரசிகர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். சிலர் முந்தைய நாள் இரவே வந்துவிட்டனர். தேவி நிர்வாகம் மற்றும் போலீசார் சேர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்து, டிக்கட்டுகளை சலிக்காமல் வழங்கினர்.

ரிசர்வேஷன் துவங்கிய ஒரு மணிநேரத்தில் மூன்று நாட்கள் ஃபுல்லாகிவிட்டது. பொதுவாகவே ரசிகர்கள் அனைவருக்கும் படத்தை தேவியில் அந்த பிரம்மாண்ட ஸ்க்ரீனில் ஒரு தடவையாவது எந்திரனை பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. சென்னையில் அண்ணா சாலையில் பிரதான இடத்தில் இருப்பதால், தேவி திரையரங்கில் எந்திரன் நிச்சயம் மக்களை பெரிதளவில் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

DSC 9352  ‘எந்திரனின் அபார முன்பதிவு சாதனை..!’ திரையரங்குகள் என்ன கூறுகின்றன? –  நமது Exclusive Advance Booking Report 3

"ஹைய்யா... நான் டிக்கட் வாங்கிட்டேன்," மாற்று திறனாளியின் மகிழ்ச்சி!

எந்திரனின் ரிசர்வேஷன் சாதனை குறித்து தேவி திரையரங்க மேனஜர் திரு.வி.ஆர். சங்கர் நம்மிடம் கூறுகையில், “எந்திரன் படத்திற்கு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. எங்கள் வளாகத்தில் டிக்கட்டுகளுக்கு கடும் பிரஷர் ஏற்பட்டுள்ளது. முதல் 5 நாளைக்கு படம் முழுக்க முழுக்க ஃபுல்லாகிவிட்டது. பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து அதற்க்கு பிறகு ஒரு வாரம் வரை டிக்கட்டுகள் புக் செய்து வருகிறோம். அவையும் மளமளவென புக்காகி வருகிறது. பொதுமக்கள் மற்றும் family audience அதிகளவில் புக் செய்ய திரண்டு வருகிறார்கள். அவர்களில் அநேகம் பேர், நீண்ட நாளுக்கு பிறகு குடுமபத்துடன் திரையரங்கிற்கு வரப்போவதாக கூறுகின்றனர். இன்னும் பலர், தங்கள் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு வந்து புக் செய்கின்றனர். இத்துனை தியேட்டர்களில் படம் வெளியிட்டும் இந்தளவு ரிலீசுக்கு முன்பாகவே வரவேற்பை பெற்றுள்ளது என்றால் அதற்க்கு முழு முதல் காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். எம்.ஜி.ஆருக்கு பிறகு அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு அளவிடமுடியாதது. அடுத்து இந்த படத்திற்கு அமைந்துள்ள பிரம்மாண்ட கூட்டணி ஒரு பெரிய ப்ளஸ். கூடவே சன் பிக்சர்சின் அருமையான ப்ரோமோஷன்! ஒரு படத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு வேறென்ன வேண்டும்?”

அடுத்து நாம் பேசியது, சென்னையின் உதயம் தியேட்டர் நிர்வாகத்திடம். திரையரங்க உரிமையாளர் திரு.மோகன் நம்மிடம் பேசியபோது, “ட்ரெயிலர் திரையிட்டபோதே, படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தற்போது எந்திரன் டிக்கட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள அதீத பிரஷரை அடுத்து நாம் என் செல்போனை சுவிச் ஆப் செய்துவிட்டேன். ரஜினியின் படம் ஒவ்வொன்றும் ரிலீஸ் ஆகும்போதும் இப்படித் தான் செய்யவேண்டியிருக்கிறது. எங்கள் வளாகத்தை பொறுத்தவரை 8 ஆம் தேதி வரை அனைத்தும் ஃபுல்லாகிவிட்டது. ட்ரெயிலரை திரும்ப திரும்ப தியேட்டர்களிலும் டி.வி.க்களிலும் பார்த்த பொதுமக்களுக்கு இதன் மீது ஏற்பட்ட ஆர்வமும் இந்த பிரம்மாண்ட ரிசர்வேஷனுக்கு காரணம். அதுமட்டுமல்ல, இந்தளவு செலவு செய்திருக்கிறார்களே, அப்படி என்ன தான் படத்துல இருக்கு? என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்க்கு முன்பு சூப்பர் ஸ்டாரின் சிவாஜிக்கு தான் இப்படி ஒரு ரெஸ்பான்சை பார்த்திருக்கிறேன். இன்னும் கூட அதிகமான நாட்களுக்கு டிக்கட்டுகளை கொடுக்கும்படியும், ரிசர்வேஷனை ஓபன் செய்யும்படியும் பொதுமக்கள் எங்களை கேட்டு வருகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை ரிசர்வேஷன் கொடுப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன. அதை மீறி நாங்கள் எதுவும் செய்வதில்லை. ஒன்றே ஒன்று உங்கள் ரீடர்சுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எந்திரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். நீங்களும் திரும்ப திரும்ப படத்தை பார்க்கப்போகிறீர்கள்! குழந்தைகளை படம் பெரிய அளவில் ஈர்க்கும்!!” என்று முடித்துக்கொண்டார் திரு.மோகன்.

DSC 9356 640x425  ‘எந்திரனின் அபார முன்பதிவு சாதனை..!’ திரையரங்குகள் என்ன கூறுகின்றன? –  நமது Exclusive Advance Booking Report 3

தேவி தியேட்டர் - அடிக்கு ஒரு போலீஸ் நிற்பதை கவனியுங்கள்!

அடுத்து நாம் பேசியது சங்கம் சினிமாஸ். இந்த காம்ப்ளெக்சில், சங்கம், பத்மம், ரூபம் என மூன்று திரையரங்குகள் உள்ளன. இங்கு எந்திரன் ரெஸ்பான்ஸ் எப்படி? பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?

சங்கம் சினிமாஸ் MANAGER & HEAD, HR திரு.கார்த்திக் கூறுகையில், “முதல் நான்கு நாட்களுக்கு படம் எங்கள் வளாகத்தில் அனைத்து ஸ்க்ரீன்களிலும் புல்லாகிவிட்டது. 40 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் ஸ்க்ரீன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது ஒரு மிகப் பெரிய சாதனை.” என்றார் கார்த்திக்.

“இதற்க்கு என்ன காரணமாக இருக்கும்?” என்றோம் நாம்.

“வேறு என்ன சார் காரணமாக இருக்கமுடியும்? ‘ரஜினி’ என்ற ஒரு மந்திரச் சொல் தான். அந்த மந்திரம் தற்போது தன்னுடன் இரு பிரமாண்டங்களையும் சேர்த்து கூட்டிவருகிறது. வரவேற்ப்பு கேட்கவேண்டுமா?” நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே டிக்கெட்டுகள் கேட்டு பல மட்டங்களில் இருந்தும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போன்கால்களில் பதிலளிக்க முடியாது கார்த்திக் திணறிக்கொண்டிருந்தார்.

அடுத்து நாம் சந்தித்தது சென்னையின் the most happening தியேட்டரான ஆல்பட். மேனேஜர் திரு.மாரியப்பனை அவரது அறையில் சந்தித்தோம். டிக்கட்டுகள் கவுண்டரில் அட்வான்ஸ் புக்கிங் செல்லும் நிலவரத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். முகத்தில் எதையோ சாதித்த திருப்தி தெரிந்தது. கூடவே, டிக்கட்டுக்கான பிரஷரை சமாளிக்க முடியாது அவதியுறும் டென்ஷனும் தெரிந்தது.

“எந்திரனின் இந்த உச்சகட்ட எதிர்ப்பார்ப்பிற்க்கும் காரணம் ரஜினி.. ரஜினி தான். அவர் படம் திரையிடும்போதேல்லாம் முதல் நாள் ஷோவுக்கான டிக்கட் கேட்டு பெரிய பெரிய இடங்களில் இருதேல்லாம் ப்ரெஷர் வரும். இந்த படமும் விதிவிலக்கல்ல. இன்றைய நிலவரத்தை வைத்து சொன்னால் படம் மிகப் பெரிய ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை வந்த ரஜினி படங்களின் சாதனை அனைத்தையும் இது முறியடிக்கும்.” என்று முடித்துகொண்டார் திரு.மாரியப்பன்.

கமலா திரையரங்கில் விசாரித்ததில் 12 நாட்கள் வரை ஹவுஸ்புல்லாகிவிட்டதாக கூறினர். சாலிகிராமம் மற்றும் வடபழனி பகுதியில் உள்ள பெரும்பாலனவர்கள் கமலாவில் டிக்கட்டுகளை புக் செய்திருப்பதாக ஊழியர் ஒருவர் நம்மிடம் கூறினார். தவிர, கார்பரேட் புக்கிங்கும் பெருமளவில் இங்கு நடைபெற்றுள்ளது.

நாம் பேசிய, சந்தித்த பல திரையரங்குகளில் நமக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கட்டுகள் சுலபமாக கிடைககும் வாய்ப்பிருந்தும் நண்பர்களுடன் படம் பார்க்கவிருப்பதால் அவர்களின் ticket offer ஐ மறுத்துவிட்டேன். (எனக்கு கொடுக்கிறேன்னு சொன்னா, என் நண்பர்களுக்கும் சேர்த்து கொடுங்கன்னு எப்படி கேட்பதாம்?).

படம் எப்படி வந்திருக்கிறது? விநியோகஸ்தர்களின் கருத்து என்ன? என்று தியேட்டர் வட்டாரங்களில் விசாரித்தபோது….

“படம் பட்டையை கிளப்பும் வகையில் வந்திருப்பதாக நமக்கு தகவல் கிடைத்தது. தவிர இதுவரை வந்த ரஜினி படங்களிலேயே இந்தப் படத்திற்கு அதிகபட்ச ரிப்பீட் ஆடியன்ஸ் இருப்பார்கள்” என்றும் உறுதியாக கூறுகிறார்கள்.

ரிசர்வேஷன் துளிகள் :

* அனைவரும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று: வழக்கத்திற்கு மாறாக, ஞாயிற்று கிழமைக்கு பதில் இம்முறை ரிசர்வேஷன் சனிக்கிழமை துவங்கியதால், பலரால் முன்பதிவு செய்ய செல்ல முடியவில்லை. (எனக்கு லேட்டானது காரணமே, ஞாயிற்றுகிழமை தான் ரிசர்வேஷன் ஸ்டார்ட் ஆகும்னு நினைச்சி மெத்தனமா இருந்துட்டேன். ஆபீசுக்கு திடீர்னு என்னால லீவ் சொல்லமுடியலே. ரிலீசுக்கு வேற லீவ் போடணுமே..!) ரிசர்வேஷனுக்கு தியேட்டர்களில் திறளக்கூடியர்வர்களில் பெரும்பாலனவர்கள் பணி செல்பவர்கள். தொழிலாளர்கள், ஓட்டல் வேலை மற்றும் கூலி வேலை, செய்பவர்கள். ஆனால் அதையும் மீறி ரிசர்வேஷனுக்கு கூட்டம் அதிகமாக வந்ததென்றால், அது சூப்பர் ஸ்டாரை தவிர வேறு யாருக்காக இருக்க முடியும்?

* காலை ஒன்பது மணிக்கு துவங்கவேண்டிய முன்பதிவு பல தியேட்டர்களில் அதிகாலையே துவங்கிவிட்டது. ஒன்பது மணிக்கு தானே அன்று சாவகாசமாக தாமதமாக வந்தவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

* ரிசர்வேஷன் ஆரவாரம் மற்றும் அந்த களேபரங்களை பதிவு செய்ய எட்டு மணிக்கு மேல் நாம் சென்றதால் நமக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

* சத்யம் மற்றும் தேவி திரையரங்குகளில் காலை 9 மணிக்கு ரிசர்வேஷன் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல தியேட்டர்களில் இரவு முதலே வந்து மக்கள் வரிசையில் நிற்க துவங்கிவிட்டனர்.

* ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனது. இப்போதே இப்படியென்றால், ரிசர்வேஷன் துவங்கும்போது காலை 9 மணிக்கு எப்படி இருக்கும் என்று கலவரப்பட்ட போலீசார், திரையரங்கு நிர்வாகத்திடம் பேசி, முதலில் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டிக்கட்டுகளை கொடுத்து அனுப்பிவிடுங்கள் என்று கூற, அதன்படி பல தியேட்டர்களில் அதிகாலையே டிக்கட்டுகள் தரப்பட்டது. இதனால், நாம் கேமிராவுடன் சென்ற போது, ரிசர்வேஷனுக்கு கூடிய மொத்த கூட்டத்தையும் கவர் செய்ய முடியவில்லை.

* ரிசர்வேஷன் கவுண்டர் முன் நிறைய கூட்டத்தை போலீசார் அனுமதிக்கவில்லை. பின்பக்கமாக தேக்கி, வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருந்தவர்களை ஒவ்வொருவராக அனுமதித்தவண்ணமிருந்தனர். (பார்க்க படம்!). இதன் மூல தள்ளுமுள்ளு தவிர்க்கப்பட்டது. தங்களுக்கு தேவையான டிக்கட்டுகளை பொறுமையாக ரசிகர்கள் ரிசர்வ் செய்ய வழி கிட்டியது.

* ஊனமுற்ற இளைஞர் ஒருவர் வரிசையில் காத்திருந்து முதல் டிக்கட்டை பெற்றார். அவர் முகத்தில் அத்துணை மகிழ்ச்சி. (தினகரன் நாளிதழில் இந்த படம் இடம் பெற்றது!)

* சத்யம் திரையரங்கில் கிட்டத்தட்ட அதிகாலை 3000 பேர் காத்திருந்தனர். ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்துக்கொண்டே போனதால் விதிகளையெல்லாம் தளர்த்தி 5:00 மணிக்கெல்லாம் டிக்கட்டுகள் தர ஆரம்பித்துவிட்டது நிர்வாகம். (இந்தமுறை, கார் பார்க்கிங் என்ட்ரன்ஸ் வழியாக க்யூ அனுமதிக்கப்பட்டது. வெளியே ஒயிட்ஸ் ரோட்டை தொட்டு அதன் பாதி வரை வரிசை காணப்பட்டது.)

* டிக்கட்டுகளை புக் செய்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கு போன் செய்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

* போலீசார் பலர் தங்களின் பங்கிற்கு பல திரையரங்குகளில் தங்கள் உயரதிகாரிகளுக்கும் குடும்பத்தினருக்கும் டிக்கட்டுகள் புக் செய்தது தனி கதை.

ஆக ரிலீசுக்கு முன்பாகவே வெற்றியை உறுதி செய்துவிட்டான் எந்திரன்.

* இறுதியாக நாம் நமது FDFS ஐ பெரம்பூரில் உள்ள பிருந்தாவில் பார்க்கவிருக்கிறோம். பிருந்தா – சென்னையிலேயே Hottest Rajini Hub. இந்த முறை சென்னையை கலக்கப்போவது பிருந்தா & காசி தான். இந்த இரண்டு தியேட்டர்களும் இந்த முறை கலக்கவிருக்கின்றன. ஏற்கனவே பிருந்தா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதி முழுதுவதும் அசத்தலான பேனர்களால் நிரம்பி வழிகிறது. தவிர, பிருந்தா நமக்கு சென்டிமென்ட்டாக மிகவும் ராசியான் தியேட்டர். நான் அங்கு FDFS பார்க்கும் அனைத்து தலைவர் படங்களும் இதுவரை சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன – பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா! (பெரம்பூரில் ஆறு வருடங்களுக்கும் மேல் நான் வசித்திருக்கிறேன்.)

————————————————————
Note: For updates on media news about thalaivar, pls refer to the RSS feed of our thalaivarnews.blogspot.com at the bottom of the home page our website.
————————————————————

Monday, September 27, 2010

‘இல்லை’ என்ற சொல் மகிழ்ச்சியளிப்பது இங்கே மட்டும் தான்! – Advance Booking Report 2

ங்கு பார்த்தாலும் “எந்திரன்” தான் பேச்சு. பஸ் ஸ்டாண்ட், டீக்கடை, அலுவலகம், பள்ளி குழந்தைகளின் கிளாஸ் ரூம், என்ஜீனியரிங் மாணவர்களின் லேப் என எங்கு பார்த்தாலும் எந்திரன் தான் வியாபித்திருக்கிறான். பள்ளி குழந்தைகள் எந்திரனில் சூப்பர் ஸ்டார் துப்பாக்கியுடன் Get Ready Folks என்பதை இமிடேட் செய்து பார்க்கும் அழகே தனி.

சென்னை திரையரங்கங்களை சுற்றி ரவுண்ட்ஸ் வந்ததில் எங்கு, யாரை பார்த்தாலும், உச்சரிக்கும் ஒரே வார்த்தை “டிக்கட் இல்லை” என்பது தான். குறிப்பாக முதல் நாள் டிக்கட். ஆனால் அதை கேட்டு யாருக்கும் கோபமோ ஏமாற்றமோ வந்ததா என்றால்…. ஹூ ஹூம் …. அதற்க்கு பதில் மகிழ்ச்சி தான்.

DSC 9396 copy1 640x440  ‘இல்லை’ என்ற சொல் மகிழ்ச்சியளிப்பது இங்கே மட்டும் தான்!  – Advance Booking Report 2

பெருமுதலீடு செய்தவனின் கடையில் சரக்கு காலியாகி வருவோர்க்கு “இல்லை” என்று சொல்வதில் ஒரு வித மகிழ்ச்சி ஒளிந்திருக்குமே அது போலத் தான் இது நம் ரசிகர்களுக்கு. தனக்கு டிக்கட் இல்லையென்றாலும் பரவாயில்லை, தலைவர் படத்திற்கான டிக்கட்டுகள் இல்லை என்ற சொல்லை கேட்டு அவன் மகிழ்ச்சி தான் அடைகிறான்.

“டிக்கட்டுகள் இல்லை” என்று தன் நட்பிற்கும் சுற்றத்திற்கும் பெருமையுடன் சொல்கிறான். தலைவர் படத்தை தவிர வேறு யாருக்கு இந்த பெருமை கிட்டும்?

எத்தனையோ தலைவர் படங்களை என் அனுபவத்தில் ரிலீஸ் சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ளதை போல ஒரு எதிர்பார்ப்பு வேறு எந்த படத்திற்கும் நாம் கண்டதில்லை. படத்தை எப்படியாவது முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் அனைவரிடமும் தென்படுகிறது. “நான் எப்போவும் கொஞ்சம் சாவகாசமாத்தான் பார்ப்பேன். முதல் நாள் நமக்கு அலர்ஜி” என்று சொல்லிகொண்டிருந்தவர்கள் அனைவரும் இப்போது என்னடாவென்றால் முதல் நாள் முதல் ஷோ டிக்கட்டுக்கு அலைந்துகொண்டிருக்கின்றனர்.

“Out of the City தியேட்டர்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம்; ஒன்லி சிட்டி தியேட்டர்ஸ் தான் வேண்டும்” என்று மிதப்புடன் கூறியர்வர்கள் எல்லாம் தற்போது “எங்கேயிருந்தாலும் பரவாயில்லே. ஒரு ரெண்டு டிக்கட்டாச்சும் இருக்கா பாருங்களேன்” என்று கெஞ்சி கொண்டிருப்பது தனி காமெடி. நம்ம சர்வீஸ்ல எத்தனை பேரை பார்த்திருக்கோம்.

கறுப்பு வெள்ளை காலத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கி, இன்று ஆன்லைன் ரிசர்வேஷன் காலத்திலும் தலைவர் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டு பட்டையை கிளப்புகிறார் என்றால் அதற்க்கு காரணமாக எதை சொல்வது? “என்னோட ராசி நல்ல ராசி… அது எப்போதும் பெரியவங்க ஆசி” என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

எலக்க்ஷன் ரிசல்ட் போல நம் ரசிகர்கள் ரிசர்வேஷனுக்கு முதல் நாள் இரவு முழுதும் கண் விழித்திருந்து, ticketnew.com தளத்தை திரும்ப திரும்ப பார்த்து எந்த தியேட்டரில் ஆன்லைன் எப்போது துவங்குகிறது என்று ஆர்குட் மற்றும் பேஸ்புக்கில் அப்டேட் செய்தவண்ணமிருந்தனர். நாம் எந்த திரையரங்கம் என்று முடிவு செய்து புக் செய்வதற்கு முன்பே அனைத்து டிக்கட்டுகளும் சட சடவென புக்கான மாயத்தை என்னவென்று சொல்வது? அந்த அதிசயத்தை எப்படி சொல்வது? இப்படியெல்லாம் இனி ஒரு படத்திற்கு நடக்குமா? ஆன்லைன் ரிசர்வேஷன் வரலாற்றில் தலைவர் ஒரு புரட்சியையே செய்துவிட்டார்.

இப்படி புக் செய்யும்போது டிக்கட் கிடைக்கவில்லைஎன்றால் அப்போதும் நமக்கு கிடைப்பது மகிழ்ச்சி தானேயன்றி ஏமாற்றமில்லை.

நேற்று தியேட்டர் விசிட் சென்றபோது ஆல்பட் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் புக்கிங் நிலவரம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது “இத்துனை நாள் எங்களை மறந்திருந்தவர்களுக்கெல்லாம் எங்கள் நினைவு ஏற்படுத்தியிருக்கிறார் தலைவர்,” என்று சிரித்துக்கொண்டே கூறினார். உண்மை தான்!!

சரி.. எந்திரன் முன்பதிவு அதிசயம் குறித்து திரையரங்குகள் என்ன சொல்கின்றன? நமது எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட் On the Way!

Stay Connected…

படையெடுத்து வந்த ரசிகர்கள்; விற்று தீர்ந்த டிக்கட்டுகள்! – Advance Booking Report 1

DSC 9338 640x425  படையெடுத்து வந்த ரசிகர்கள்; விற்று தீர்ந்த டிக்கட்டுகள்! – Advance Booking Report 1

சென்னையில் அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்துடன் ரிசர்வேஷன் துவங்கியது.

காலை 10.30 நிலவரப்படி பெரும்பாலான திரையரங்குகளில் ஐந்தாம் தேதி வரை டிக்கட்டுகள் விற்றுதீர்ந்துவிட்டன.

ரிசர்வேஷனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக துல்லியமாக செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை சீர் செய்யப்பட்டது.

அதிகாரப்பூர்வ ரிசர்வேஷன் இன்று காலை துவங்கியபோதும் முதல் நாள் மற்றும் சனி ஞாயிறு டிக்கட்டுகள் கிடைக்கவில்லை என பல ரசிகர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கான டிக்கட்டுகளை வாங்கிசென்றனர்.

DSC 9374 640x425  படையெடுத்து வந்த ரசிகர்கள்; விற்று தீர்ந்த டிக்கட்டுகள்! – Advance Booking Report 1

சென்னையில், தேவி, மற்றும் சத்யம், அபிராமி, உள்ளிட்ட திரையரங்குகளில் கடும் கூட்டம் காணப்பட்டது.

ரிசர்வேஷன் சுவாரஸ்யங்கள் மற்றும் நிலவரம் குறித்த விரிவான செய்தி அடுத்து வந்துகொண்டிருக்கிறது.

Stay Tuned…

Thursday, September 23, 2010

ஏ.ஜி.எஸ். சினிமாஸில் ரஜினி ஸ்பெஷல் படங்கள் திருவிழா!

ஏ.ஜி.எஸ். சினிமாஸில் ரஜினி ஸ்பெஷல் படங்கள் திருவிழா + எந்திரன் முதல் நாள் டிக்கட்!

வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே இருந்த, ராயல் திரையரங்கம் தற்போது ஏ.ஜி.எஸ்.சினிமாஸ் என்ற பெயரில் மல்டிபிளெக்சாக புதிய பொலிவுடன் மாறியுள்ளது. புத்தம் புதிய தோற்றத்துடன் அசத்தலாக காட்சியளிக்கும் இந்த திரையரங்கில், தற்போது "சூப்பர் ஸ்டார் ரஜினி வாரம்" கொண்டாடப்படவிருக்கிறது.

தில்லுமுல்லு, முத்து, முரட்டுக்காளை, தளபதி,பாட்ஷா, மன்னன், அண்ணாமலை என சூப்பர் ஸ்டாரின் ப்ளாக் பாஸ்டர் திரைப்படங்கள் தொடர்ந்து ஒரு வாரம் திரையிடப்படவிருக்கின்றன.

இது குறித்து ஏ.ஜி.எஸ். திரையரங்கம் நேற்றும் இன்றும் ஹிந்து நாளிதழில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. (கீழே இணைக்கப்பட்டுள்ளது.).

Press Release From AGS:

Rajni film fest at AGS Cinemas

'Superstar' Rajnikanth needs no introduction. The 'Badshah' of the box office, he has swayed the masses with his style and charisma.

From Apoorva Ragangal to Endhiran, he has stood like a colossus virtually scaling one height after another, delivering successive hits.

From the lanky tall Sivaji Rao Gaekwad, his transformation to Rajnikanth has been phenomenal. The journey filed with hardwork and dedication has made hm what he is today.


With Endhiran ready for release and in a bid to salute the messiah of the masses, AGS Cinemas ( An Multiplex 5 minutes form Anna Nagar Round Tana) is organising a Rajnikanth Film Festival beginning this Friday(24th September 2010).


Friday (Annamalai), Saturday (Mannan), Sunday (Dalapathi), Monday (Guru Sishyan), Tuesday (Murattukaalai), Wednesday (Muthu). Thurday (Chandramuki)
.


Tickets:
www.agscinemas.com என்ற முகவரியில் ஆன்லைனில் புக் செய்யலாம்.

திரையரங்க முகவரி மற்றும் மேல் விபரங்களுக்கு:
http://www.agscinemas.com/contactUs.aspx
என்ற இணைய முகவரியை செக் செய்யவும்.

இந்த செய்தி நமக்கு முன்பே தெரிந்தாலும் ..official confirmation வரும் வரை இதை வெளியிடாமல் இன்று பிரஸ் அறிக்கை வெளியானதை அடுத்து இதை வெளியிடுகிறோம்.

-----------------------------------------------------------
ஏ.ஜி.எஸ். திரையரங்கில் உங்களை சனிக்கிழமை இரவு சந்திக்கிறேன்.
- சுந்தர்
+91-9840169215

Seattle friends celebration-Deccan

Deccan Chronicle has published our Seattle friends celebration for Enthiran Ticket sale inauguration in Today's news. Here is the article for you...

Enthiran ticket sale launched amidst festive fare in Seattle, USA - News & Pics!

The great moment has begun again.

Superstar is the only legend who can give continuous excitement to his fans. Seattle is the one of his largest fans hub in the USA.




The festival moment had started right from the Enthiran Audio Cd launch in Seattle. Seattle fans always find a way to celebrate their idol Superstar Rajinikanth. They decided to celebrate the Enthiran tickets sales launch at Mayuri Videos, Redmond , the only store in Seattle which sells the exclusive Collector's edition tickets for Enthiran. Local fans plus Fans from Portland(Oregon State) and other parts of Washington state have come and celebrated and bought the premier show tickets.


The event was organised by Seattle Superstar Rajini fans Elango, Filbert, Shivarajan, Gunasekar, Madurai Sha, Udipi Ramesh along with the head volunteer of Seattle Superstar fans Saha Nathan who is also well known author from India.


Mr.Kal Raman, Founder & CEO, Global Scholar who is the die hard fan of Superstar and Dr. Somasekar, Corporate VP, Microsoft who always encourage and support the Tamil community have facilitated this rememberable function. Both together inaugurated the tickets sales by cutting a cake which had a message "Enthiran Tickets Sales Starts".

It was distributed to all the fans to make a sweet start.


The important note is even few americans around the area was also excited and bought tickets for the premiere show.

The whole event was sponsored by a local website called desiroute.com.

The ticket price for premier show itself has created a new record for Enthiran

The tickets were priced at $ 40 for Enthiran. Earlier for Sivaji premier show - $25.

For other Tamil movies it was $15 and Telugu films $ 10 to $ 15.

News by : Seattle Thalaivar fans

---------------------------------------------------------------------
Our reader Satish says: I’m impressed to see Kal Raman’s name. See below the rediff article on Kal Raman. You will be impressed. He is like Thalaivar – a true rags to riches story.

http://business.rediff.com/slide-show/2010/sep/01/slide-show-1-from-studying-under-streetlamps-to-ceo-of-us-firm.htm
---------------------------------------------------------------------

Full Gallery:


Tuesday, September 21, 2010

அபிராமி உள்ளிட்ட திரையரங்குகளில் எந்திரன் புக்கிங் துவங்கியது!

க்டோபர் 1 திருவிழாவிற்காக ரசிகர்கள் ஒரு புறம் ரசிகர்கள் தயாராகிவருகின்றனர். மறுபுறம், திரையரங்குகள் தயாராகிவருகின்றன.

எந்திரனின் அதிகாரப்பூர்வ ரிசர்வேஷன் வரும் 26 ஆம் தேதி ஞாயிற்று கிழமை துவங்குகிறது. ஆனால் ஒரு சில திரையரங்குகளில் இப்போதே ஆன்லைன் புக்கிங் துவங்கிவிட்டது.

சென்னை அபிராமி மெகா மாலில் உள்ள அபிராமி செவென் ஸ்டார் திரையரங்கில் எந்திரன் படத்திற்கான முன் பதிவு நேற்று மாலை துவங்கியது. துவங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் நான்கு நாட்கள் ஃபுல்லாகிவிட்டது.

http://movie-ticket-abirami.com/index.aspx?sitefrom=Abirami.in

அதேபோல காரைக்குடி பாண்டியன் திரையரங்கிலும் ஆன்லைன் முன்பதிவு துவங்கிவிட்டது.

http://ticketnew.com என்ற முகவரிக்கு சென்று லாகின் செய்து தமிழகத்தில் உள்ள அனேக திரையரங்குகளில் ஆன்லைன் புக்கிங் செய்யலாம்.

இவை தவிர பல திரையரங்குகளில் கார்பரேட் மற்றும் bulk புக்கிங்கள் சத்தமின்றி நடந்து வருவதாக தகவல். இதையடுத்து முதல் மூன்று நாட்களுக்கான டிக்கட்டுகள் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பல ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி காண ஆவலோடு உள்ளனர்.

————————————————————-
We are growing. So as problems. If you experience any problem in our site, pls check in our standby blog : www.onlysuperstar.blogspot.com for updates.

Also keep visiting http://twitter.com/thalaivarfans any new announcements regarding movie or our website.

- Sundar
Mobile: 9840169215
E-mail : simplesundar@gmail.com

(Strangers, no ticket enquiries please!)
————————————————————-

[END]

Friday, July 30, 2010

We are moved to www.onlysuperstar.com


Hi Friends.... Please visit us at www.onlysuperstar.com

தினகரனின் எந்திரன் ஆடியோ ரிலீஸ் சிறப்பு மலர் - முழு ஸ்கேன் பக்கங்கள்!

நேற்றைக்கு நம் ரசிகர்கள் பல பேர் தூங்கியிருக்க மாட்டார்கள். எந்திர தரிசனத்திற்கு காத்திருந்து - கண்விழித்து - அதிகாலை எழுந்து - கடைக்கு ஓடிசென்று பேப்பர் வாங்கி வந்து பார்த்து பரவசப்பட்டு - நண்பர்கள் அனைவருக்கும் சொல்லி சொல்லி ஆனந்தப்பட்ட எண்ணற்ற ரசிகர்களுள் நானும் ஒருவன்.

இன்றைக்கு தினகரன், விற்பனையில் சாதனை படைத்து வருகிறது என்பது மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். ரசிகர்கள், பள்ளி மாணவர்கள், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், என பல தரப்பட்ட மக்கள் தினகரனை கேட்டு வாங்கி சென்றதை இரண்டாம் முறை நாம் கடைக்கு சென்றபோது காணமுடிந்தது.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்....
அவர் பேர ஒரு தரம் சொன்னா.... எப்படிப் பட்ட பேப்பரும் விக்கும்!

எந்திரன் ஸ்கேன் பக்கங்கள் இதோ உங்களுக்காக....

Also Check today's ad still at the end... Common in all papers

Page 1 & 4

Page 2 & 3


Today's ad: Common in all papers


[END]

Friday, May 28, 2010

நேற்றைய முதல்வர்; இன்றைய முதல்வர்; நாளைய முதல்வர் - ஆர்.எம்.வீ. இல்ல விழா சுவாரஸ்யம்!


நாளிதழ்களில் ஆர்.எம்.வீ. அவர்களின் இல்ல திருமண விழா பற்றி விளம்பரம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்போதே யூகித்தேன், தலைவர் நிச்சயம் இதில் கலந்துகொள்வார் என்று. ஏன் கணிப்பு தவறவில்லை. ஏனெனில், ஆர்.எம்.வீ. அவர்கள் மீது சூப்பர் ஸ்டார் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அளவிடமுடியாதது. அவர் இல்ல திருமணம் என்றால் சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு இல்லாமல் இருக்குமா அல்லது சூப்பர் ஸ்டார் தான் கலந்துகொள்ளாது போய்விடுவாரா?

ஆர்.எம். வீரப்பன் மகன் தங்கராஜ் திருமணம் சென்னை ராஜா முத்தையா மகாலில் இன்று நடந்த போது ரஜினி பங்கேற்று பேசினார். என் மனதில் நீண்ட நாட்களாக உறுத்தி வந்த ஒரு விஷயத்தை பற்றி வெளிப்படையாக தலைவரே தனது மனதில் இருப்பதை கொட்டிவிட்டார்.


பாட்ஷா பட வெள்ளி விழாவில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி சூப்பர் ஸ்டார் கண்டிக்கப் போய், அது கடைசியில் எங்கு போய் முடிந்தது என்று உங்களுக்கே தெரியும். அந்த சுழலில் சிக்கி பாதிக்கப்பட்டவர் தான் ஐயா ஆர்.எம்.வீ.

1996 - ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - தா.மா.கா கூட்டணி அமைத்து அது தேர்தலில் சூப்பர் ஸ்டாரின் மகத்தான ஆதரவுடன் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று வாகை சூடியபோது, சூப்பர் ஸ்டாரின் பேச்சால் அ.தி.மு.க.விலிருந்தே நீக்கப்பட்ட ஆர்.எம்.வீ. அவர்கள் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. கிட்டத்தட்ட அனைவராலும் மறக்கப்பட்டார். தனது வழக்கப்படி, சீட் இல்லாதவர்களுக்கு இதயத்தில் தான் இடமுண்டு என்று கலைஞர் கூறிய சமயத்தில், அவர் கிட்டே பேசி ஒரு எம்.எல்.ஏ. தொகுதியாவது ஆர்.எம்.வீ. அய்யாவுக்கு தலைவர் வாங்கி தந்திருக்கலாம்.

இத்துனை புறக்கணிப்பிலும் சூப்பர் ஸ்டாருடன் ஆர்.எம்.வீ. வைத்திருந்த நல்லுறவு, ஆண்டுகள் கழிந்த போதும் பாதிக்கப்படவேயில்லை. அதற்க்கு பிறகு நடைபெற்ற சூப்பர் ஸ்டாரின் பல பட துவக்க விழாக்களுக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்துள்ளார்.


சூப்பர் ஸ்டார் ஆர்.எம்.வி. அவர்கள் குறித்தும், பாட்ஷா படத்தின் பிரமாண்ட வெற்றி குறித்தும் மேற்படி திருமண நிகழ்ச்சியில் பேசியதாவது....

"ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று கலைஞரை ஒரே மேடையில் சந்திக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆர்.எம். வீரப்பன் எனது நீண்ட கால நண்பர். அவருக்கும் எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. அன்பானது.

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்து இருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர்.
பாட்ஷா பட சர்ச்சையில் உங்களுக்கு இப்படியொரு நிலைமை ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கு அவர் இது காலத்தின் கட்டாயம் என்றார். ஆத்திக வாதி என்றால் கடவுள் செய்தது என்பார்கள். இவர் நாத்திக வாதியாக இருந்ததால் காலத்தின் கட்டாயம் என்றார்.


ஆர்.எம். வீரப்பன் நண்பராக மட்டுமின்றி வழி காட்டியாகவும் இருக்கிறார். என் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளார்.
பாட்ஷா படம் எனக்கு ரொம்ப பேர் வாங்கி கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர்.எம். வீரப்பன். அந்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டினார். அவரது தயாரிப்பில் வந்த மூன்று முகம் படமும் அபாரமாக வெற்றி பெற்றது.


பாட்ஷா படம் மாதிரி மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அப்படி எடுத்தால் ஆர்.எம். வீரப்பன்தான் தயாரிக்க வேண்டும் என்றேன். அவரால் தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்.

எம்.ஜி. ஆருடன் எப்படி நட்புடன் இருந்தாரோ அதே போல் கலைஞரிடம் இப்போது இருக்கிறார்." இவ்வாறு ரஜினி பேசினார்.


விழாவில் சுவாரஸ்யம்: மேலே உள்ள புகைப்படத்தை சற்று பாருங்கள்.... தற்போதைய முதல்வர் கலைஞரும், அருகே நிற்கும் சூப்பர் ஸ்டாரும், பின்னணியில் (backdrop) முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களின் படமும், இடம் பெற்றுள்ள இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

நேற்றைய முதல்வர்; இன்றைய முதல்வர்; நாளைய முதல்வர்!! சரி தானே? (தலைவருக்கு ராஜ களை இப்போவே வந்துடுச்சுப்பா!)

கீழே உள்ள படத்தை பாருங்களேன். முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன் தலைவரிடம் ஏதோ பேசுவதை... இந்த ஸ்டில் இன்னும் டக்கர் தானே?


[Note: Site Maintenance work is almost completed. Soon we shall meet in our brand new home site Onlysuperstar.com]

Monday, May 24, 2010

கூட்டத்தில் இடறி விழுந்த ரசிகர்; ஓடிச் சென்று தூக்கிய தலைவர்!

டிகர் விஜய் வசந்த்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் வந்தபோது அவரை பார்க்க கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக சூப்பர் ஸ்டார் அந்த நிகழ்ச்சியில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை என்றும் நமது முந்தைய பதிவில் ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த நிகழ்ச்சியில் நடந்த மற்றோர் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் இதோ.
(இன்றைய Times of India நாளிதழிலிருந்து...)

எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு சூப்பர் ஸ்டாருக்கு இத்துனை கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் காரணமில்லாமல் இல்லை. அவரது அசத்தலான நடிப்பு மற்றும் ஸ்டைலுக்கு ரசிகர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்கள் என்றாலும், அதையும் தாண்டி அவருக்குள் இருக்கும் அடக்கமான, எளிமையான, பிறருக்கு உதவும் எண்ணமுள்ள ஒரு மனிதனுக்கு தான் ரசிகர்கள் அதிகம். இந்த அவரது குணாதிசியம் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மீண்டும் வெளிப்பட்டது.

நடிகர் விஜய் வசந்த்தின் திருமண வரவேற்ப்பு நடந்த காமராஜர் அரங்கத்திற்கு சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அவரை பார்க்க அலைமோதினர். பலர் அவருக்கு கைகொடுக்க முண்டியடித்தனர். கூட்டம் ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காமல் போக, சூப்பர் ஸ்டார் மணமக்களுக்கு வாழ்த்துக் கூறிவிட்டு அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு சூப்பர் ஸ்டார் திரும்பலானார்.

உடனே, மொத்த கூட்டமும் அவருக்கு பின் ஓடிச் செல்ல, இந்த சலசலப்பில் அவரை காண முற்பட்ட ஒரு ஊனமுற்ற ரசிகர் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தவறி விழுந்துவிட்டார். விழுந்த வேகத்தில் அவரது ஊன்றுகோல்கள் சிறிது தூரம் தள்ளிப்போய் விழுந்தது. தனக்கு பின்னால் ஏதோ பரபரப்பு என்பதை உணர்ந்த சூப்பர் ஸ்டார் திரும்பிப் பார்க்க, உடனே ஓடிச்சென்று அவரை தூக்கி அவரது ஊன்றுகோல்களை தனது கையால் எடுத்துகொடுத்து, ஆறுதல் கூறினார். "இது போன்ற கூட்டம் மிகுந்த இடங்களில் பார்த்து கவனமாக வரவேண்டும்" என்று அவருக்கு புத்திமதி கூறினார். சூப்பர் ஸ்டாரை பின் தொடர்ந்து புகைப்படமெடுக்க சென்ற ஒரு போட்டோக்ராபர் இதை பார்த்துவிட உடனே இதை படமேடுத்துவிட்டார்.

கீழே விழுந்த அந்த ரசிகரோ, தான் விழுந்ததை பற்றி கூட பொருட்படுத்தாமல், "தலைவர் என்னை தொட்டுவிட்டார். நான் அவருடன் பேசிவிட்டேன். எனக்கு கீழே விழுந்ததனால் ஏற்பட்ட வலியை பற்றி கவலையில்லை. தலைவருடன், பேசியதே எனக்கு மகிழ்ச்சிதான்," என்றார்.

--------------------------------------------------------
Times of India (24/05/2010) English Transcript:

IMPRESSIVE AS EVER
K S PRAKAASH

It’s not without reason that superstar Rajini has such a huge fan following. The man, who is known for his style and acting skills, is also known for his altruistic nature. And it was this nature of his that was on display at a recent function.

When superstar Rajini walked in to wish Chennai-600028 actor Vijay at his wedding reception, he was greeted by a crowd that had gathered to catch a glimpse of him.And in the crowd was a differently abled person, who was equally intent on meeting the star. As people pulled and pushed at each other in their eagerness to meet the star, he lost his balance and fell.

Rajini, seeing the commotion, rushed to the rescue of the man. He helped him up and suggested that he be careful while in a crowd.

The man, who did not seem to care about the fact that he had fallen down, was heard saying, “Rajini sir touched me! I spoke to him! I don’t care about the pain. I’m happy I could talk to the superstar.”

--------------------------------------------------------

Thursday, May 20, 2010

நடிகர் விஜய் வசந்த் திருமண வரவேற்பு - சூப்பர் ஸ்டார் நேரில் வாழ்த்து - Excl. படங்கள் !!

நண்பர்களே....

நமது வெப்சைட் MAINTENANCE பணி காரணமாக கடந்த இரு வாரங்களாக, எந்த பதிவும் போட இயலவில்லை. இரு தினங்களில் முடியவேண்டிய பணி, இத்துனை நேரம் இழுக்கிறது. (எனக்கு இத்துனை காலம் இந்த பணிகளில் உதவியவர் மேற்படிப்புக்காக தற்போது அயல் நாடு சென்றுவிட்டபடியால், மாற்று ஏற்பாடு செய்ய தாமதமாகிவிட்டது.) தற்போது கோளாறுகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில், BY GOD'S GRACE நமது தளத்தில் எந்த வித தொய்வும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் நமது பழைய சர்வரை மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் அது முடிவடையும். இந்த தருணங்களில் எந்த வித புதிய போஸ்ட்டையும் தளத்தில் போட இயலாது.

அதே சமயம் சூடான செய்திகளை, புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? எனவே, தற்காலிகமாக எனது ப்ளாக் அக்கவுன்ட்டை மீண்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.(Hmm...இதை முதலிலேயே செய்திருக்க வேண்டும்..!)

Onlysuperstar.com தளம், முழுவதுமாக சரி செய்யப்படும் வரை இங்கு நாம் சந்திப்போம். உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிவியுங்கள்.

சிரமத்திற்கு வருந்துகிறேன்.

- சுந்தர்
Onlysuperstar.com

நடிகர் விஜய் வசந்த் திருமண வரவேற்பு - சூப்பர் ஸ்டார் நேரில் வாழ்த்து

'நாடோடிகள்' படங்களில் நடித்தவர் விஜய் வசந்த். இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்த குமாரின் மகன். விஜய் வசந்துக்கும் சென்னையை சேர்ந்த நடராஜன்-சாந்தி தம்பதி மகள் நித்யாவுக்கும் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று காலை திருமணம் நடந்தது.



மத்திய மந்திரி ஜி.கே. வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே. மணி, திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள்.

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்தினர். திருமண வரவேற்பு இன்று மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கில் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.



சூப்பர் ஸ்டார் அரங்கில் இருந்தது மொத்தம் ஐந்து நிமிடத்திற்கும் குறைவுதான். ஆனால் அவர் இருந்தபோது ஏற்பட்ட பரபரப்பு பிறகு அடங்குவதற்கு நேரம் பிடித்தது. சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவரை காண கூட்டம் முண்டியடிக்க, அங்கு கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. (இந்த புகைப்பங்களை பாருங்கள், மிகவும் கஷ்டப்பட்டு போட்டோக்ராபர் இதை எடுத்திருப்பது புரியும்.)

நிலைமையை புரிந்து கொண்ட சூப்பர் ஸ்டார், மணமக்களை வாழ்த்திவிட்டு மின்னலென கிளம்பி சென்றுவிட்டார். சூப்பர் ஸ்டார் நேரில் வாழ்த்திய இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள மணமக்களுக்கு தான் சற்று நேரம் பிடித்தது.

[END]

Tuesday, March 3, 2009

Superstar's speech welcomed with thunderous applause and shouts

As gueseed by us, Superstar took part on second day of Kannada film industry's Platinum Jubilee Celebrations Amrutha Mahotsava and delivered a riveting speech.

The legendary star no doubt was the cynosure of all eyes yesterday at the event. When the news broke out about the star's presence in the event, the fans went berserk and couldn't be controlled and it was a tough time for the police to manage them. One could here, whistles and claps and catcalls "thalaivaaaaa" spelt from the hear and soul.

Over to media reports on the same:

Deccan Herald's complete report on Superstar's speech

Times of India, Bangalore edition has given a fantastic report on the same with audience's arousing response for Superstar and his speech. Pls read between lines....

KEEP POLITICS OUT
Times News Network

Bangalore: “Please don’t divide us. We are living like brothers. Please don’t bring politics into cinema,’’ this was the fervent appeal by superstar Rajnikant.

His words were welcomed with thunderous applause and shouts by the crowd on Monday, the second day of the platinum jubilee celebrations of Kannada cinema. As many as 108 personalities from various segments of the industry were felicitated.

The amity and effervescence of personalities from the Kannada, Telugu and Tamil industries sent a collective message — art transcends boundaries, languages and cultures. Rajnikant, Dasari Narayana Rao, Jayaprada, Prakash Rai, Prabhudeva and Rama Naidu shared the dais with the Kannada film fraternity and spoke in one voice against politicization of cinema.

“Politics is like an ocean, while film industry is a pond. If the ocean can’t solve its problems, how can a small pond do it?’’ asked Rajnikant. On Sunday, Kamal Haasan had appealed to keep politics away from cinema.

One person was sorely missed during the celebrations: Rajkumar. Every speaker remembered and praised him, from Jayaprada to Prakash Raj to ministers Shobha Karandlaje and Katta Subramanya Naidu.

Rajnikant, who was present till the end of the three-hour programme, advised Kannada film-makers to make films based on novels and stories available in Kannada. “The industry has produced monumental films based on novels of writers like Ta Ra Su and Indira. There are so many great works by Kuvempu, Shivaram Karanth and Bendre. I don’t know why they are not being utilized. It makes me sad.’’

RAJNI’S WISH: The Tamil superstar expressed his desire to work in a Kannada film. “I want to act in Dalawayi Muddanna. It suits my character. I love that character. I don’t know when I will be able to do it. I don’t know when God wills,’’ said Rajnikant.

Rare photo tribute: An exhibition of over 3,000 rare Kannada film stills taken by K M Veeresh, at the Palace Grounds on Monday, marked the ‘Photo tribute’ to the 75th year of the Kannada film industry. Photos dating back to the first talkie Sati Sulochana to the latest Namyajmanru took the visitors to a different world.

Remembering the icons: To mark the platinum jubilee celebrations, 75 books were released on 75 late cinema icons, including Gubbi Veeranna, Subbaiah Naidu, B R Panthalu, R Nagendra Rao, Rajkumar and Balakrishna. Their family members were felicitated.

Monday, January 5, 2009

Titbits 11: "மக்கள் செல்வாக்குள்ள ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்!" - சிரஞ்சீவி, "ரஜினி ஒரு அபூர்வ மனிதர்" - லியாண்டர் பயஸ் Etc, etc.,

1) "ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்" - சிரஞ்சீவி

தமிழக எல்லைகளில் உள்ள ஆந்திர மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய சிரஞ்சீவி நேற்று விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சிரஞ்சீவி அரசியல் கட்சி நடத்தும் விதத்தில் எனக்கு நிறைய மாற்று கருத்துக்கள் உண்டு. அவர் குறித்த ஏமாற்றங்களும் உண்டு. அது ஒரு புறம் இருக்கட்டும். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பகிரங்கமாக தனது விருப்பத்தை தெரிவிப்பவர்களில் சிரஞ்சீவியும் ஒருவர்.

தமிழகத்திலும் நம்மை போல நடிகர் ஒருவர் கட்சி துவங்கினால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைக்கலாம். (அப்ப ஏற்கனவே கட்சி துவக்கியுள்ள நடிகர்கள் ? அவர்களையெல்லாம் யார் கணக்கில் சேர்த்தது..!) மேலும் சூப்பர் ஸ்டார் அவரின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த சூழ்நிலையில் "தமிழகத்தில் ரஜினிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதை புரிந்துகொண்டு அவர் அரசியலுக்கு வரவேண்டும்." என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சிரஞ்சீவி.

2) "சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி ரஜினி ஒரு அபூர்வமான மனிதர்" - டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்

சூப்பர் ஸ்டாரைப் பற்றி இதோ மற்றுமொரு பிரபலத்தின் அட்டகாசமான கருத்து. இன்று வெளியாகியிருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பேட்டியளித்துள்ளார்.

நான் ரஜினியின் பல படங்களை பார்த்திருக்கிறேன். அதில் பல படங்கள் என் "All time favourites". நான் சிறு வயதில் அவரை நேரில் சந்திக்கும் அறிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி ரஜினி ஒரு அபூர்வமான மனிதர் என்று தான் நான் கருதுகிறேன்.

கவனிக்க கேள்வியாளர் கேட்டதென்னவோ, ஏதாவது தமிழ் படங்கள் பார்த்திருக்கிறீர்களா என்பது தான். ஆனால் அதற்க்கு அவர் கூறியிருக்கும் பதில் தான் நீங்கள் மேலே படித்தது. தமிழ் சினிமா என்றாலே ரஜினி தான் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருகிறார். இந்த நிலையில் அவரின் செல்வாக்கை அளக்கிறேன் என்று அவரை சிறுமைப்படுத்த முயலும் கைப்புள்ளைகளை என்னவென்று சொல்வது...?

(செய்தி உதவி: மணிகண்டன்)

3) புத்தாண்டை முன்னிட்டு ஸ்டார் தியேட்டரில் முத்து - தூள் கிளப்பிய நம் ரசிகர்கள்

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள திரையரங்கம் ஸ்டார். இங்கு பெரும்பாலும் இரண்டாம்கட்ட அல்லது மூன்றாம் கட்டமாக ரிலீசாகும்படங்கள் தான் திரையிடப்படும். சில சமயம் பழைய படங்கள் கூட திரையிடுவார்கள். நம் சூப்பர் ஸ்டாரின் பழைய படங்கள் இங்கு அடிக்கடி ரிலீசாகும்.

அப்படி நம் படங்கள் திரையிடப்படும்போது திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நம் ரசிகர்கள் பலர் தவறாது வந்து படங்களை கண்டுகளிப்பர்.

புத்தாண்டையொட்டி இங்கு சூப்பர் ஸ்டாரின் முத்து திரையிடப்பட்டது. 31 ஆம் தேதி இரவுக்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. மொத்தம் சுமார் 250 - 300 பேர் இருந்தனர் அரங்கில். படம் ஆரம்பித்து தட்டில் கார்ட் போட்டதிலிருந்து இடைவேளை வரை நம் ரசிர்கள் பலர் ஆட்டம் பட்டம் கொண்டாட்டம் என திரையரங்கை அதகளப்படுத்திவிட்டனர்.

ஸ்க்ரீன் முன்பாக ஓயாமல் மெழுகுவர்த்தி, கற்பூரம் என்று கணக்கிலாமல் ஏற்றி வைத்து, "சூப்பர் ஸ்டார் வாழ்க" "தெய்வமே" "டாக்டர் ரஜினிகாந்த்" என்று கோஷம் போட்டுகொண்டேயிருந்தனர். ஒருவன் ஒருவன் முதலாளி, அம்ற்றும் தில்லானா பாடலின் போது கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் ஸ்க்ரீன் முன்பாக உற்சாக நடனமாடினர். முக்கிய வசனங்களின் போது விசில் சத்தம் பறந்தது.

சரியாக புத்தாண்டு பிறந்த நேரத்த்தில் அதாவது இரவு 12.01 க்கு ஜெயபாரதி சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் பற்றி "இந்த மண்ணுக்கு சொந்தக்காரனே அவன்தான்டா. இந்த மண்ணை ஆளவேண்டியவனே அவன்தான்டா." என்று கூறும் வசனம் தோன்றியது. தற்செயலாக இருந்தாலும் மொத்தத்தில் புத்தாண்டு கலக்கலாக பிறந்துள்ளது.

படத்தை அன்றிரவு அங்கு பார்த்த நம் நண்பர் ஒருவர் சொன்னது இது.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் முத்து திரைப்படம் அடிக்கடி டி.வி.க்களில் ஒளிபரப்பான படம் என்பது தான். சமீபத்தில் கூட இப்படம் சன் டி.வி.யில் ஒளிபரப்பட்டது. அப்படி இருந்தும் மக்களை தியேட்டருக்கு இழுக்க சூப்பர் ஸ்டார் ஒருவரால் மட்டுமே முடியும்.

4) திருமங்கலத்தில் தூள் பறக்கும் காமெடி காட்சிகள்

திருமங்கலத்தில் தினசரி காமெடி கலாட்டா தான். உபயம்: நம் கேப்டன். அவரின் உரையை கேட்டால் வயிறு குலுங்க சிரிக்கலாம். மன அழுத்தம், மன சோர்வு உள்ளிட்ட பல நோய்களுக்கு அது மாமருந்து. போதாகுறைக்கு அண்ணன் சுப்ரீம் ஸ்டார் வேறு களத்தில் உள்ளார். மக்களை கிச்சு கிச்சு மூட்டுவதில் இருவருக்கும் கடும்போட்டி நிலவுகிறது.

உதாரணத்துக்கு கேப்ப்டனும் சுப்ரீம் ஸ்டாரும் கூறிய சில டயலாக்குகளை படியுங்களேன். உங்களுக்கே புரியும்.

கேப்டன்: "பொதுமக்களுக்கு பணம் கொடுத்து எனது பிரசாரத்துக்கு வரவிடாமல் சில கட்சியினர் தடுக்கின்றனர். தே.மு.தி.க வேட்பாளர் தவறு செய்தால் கட்டி வைத்து உதைப்பேன். வாக்காளர்களுக்கு சில கட்சியினர் செல்போன் கொடுத்துவருகின்றனர். அப்படி கொடுத்தாலும் எனது வெற்றியை தடுக்க முடியாது. இந்த தேர்தலுக்கு கிட்டத்தட்ட நூறு கோடிவரை செலவழிக்கிறார்கள். எல்லாம் என் வெற்றியை தடுக்கத் தான். இங்கு ஒரு நடிகர் பிரசாரத்துக்கு வரப் போவதாக அறிந்தேன். (சரத் குமாரை மறைமுகமாக குறிப்பிட்டு). நடிகர்களை எல்லாம் நம்பாதீர்கள். அவர்கள் உங்கள் முன் நடிப்பார்கள்" என்று வீராவேசமாக பேச, "யோவ் அப்போ நீ யாருய்யா" என்று ஒருவர் சவுண்ட் விட, கேப்டன் உடனே கப்சிப்.

அதேபோல், வேறொரு கிராமத்தில் மக்களை பார்த்து, "நீங்கள் யாருக்கு ஒட்டுபோடுவீர்கள்?" என்று ஆவலாக கேட்க, "தி.மு.க.வுக்கு" என்று பாதி கூட்டமும், "அ.தி.மு.க.வுக்கு" என்று மீதி கூட்டமும் கோரசாக காத்த, நொந்தே போய்விட்டார் கேப்டன். (இது அவர் ஆதரவு நாளிதழிலேயே இன்று வந்துள்ள செய்தி!)

சரி அப்படின்னா, இவர் பிரசாரத்துக்கு எதுக்கு கூட்டம் வருதுன்னு கேக்குறீங்களா? அட எல்லாம் அவர் பண்ற காமெடியை ரசிக்கத்தான். இலவசமா காமெடி காட்சி கிடைச்சா நீங்க ரசிக்க மாட்டீங்களா என்ன?

பிரசாரத்துக்கு செல்கையில் தி.மு.க. வின் தேர்தல் அலுவலகம் ஒன்றை பார்த்து வண்டியை நிறுத்தி கேப்டன் சவுண்ட் விட, பதிலுக்கு அவர்கள் கற்களை தூக்க, கேப்டன் ஓட்டம் பிடித்தது தனிக்கதை.

ஒ.கே. அடுத்து சுப்ரீம் ஸ்டார் என்ன சொல்றாருன்னு பார்போம்.

சுப்ரீம் ஸ்டார்: (இவருக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்று யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்).

எங்கள் இலக்கு பாராளுமன்ற தேர்தல் தான். இதற்காக வரும் ஜனவரி 21 தேதி முதல் ராதிகாவும் நானும் அடுத்தடுத்து சூறாவளி பிரச்சாரம் செய்யவிருக்கிறோம். மற்றவர்கள் பணம் கொடுப்பதை எதிர்க்கும் விஜயகாந்த் அவர் மட்டும் வாக்களர்களுக்கு பணம் கொடுக்கலாமா? இந்த தேர்தல் நியாயமாக நடந்தால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

சுப்ரீம் ஸ்டாரினி : (அதாங்க ராதிகா)

என் கணவருக்கு குடிகாரர் என்ற பெயர் கிடையாது. சட்டசபைக்கு சிலர் குடித்துவிட்டு வருவதுண்டு. இப்படியெல்லாம் நடக்குமா என்று என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்தால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்.

எப்படி... போட்டி போட்டுகொண்டு கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் அல்லவா?

இப்படி தினம் தினம் திருமங்கலத்தில் காமெடி திருவிழாதான்.

[END]

Sunday, January 4, 2009

ரஜினியின் செல்வாக்கை அளக்க கிளம்பியுள்ள கைப்புள்ளைகள்

*TRANSLATION AVAILABLE AT THE END OF THE ARTICLE

ஜினியின் செல்வாக்கை நாங்கள் அளக்கிறோம் பேர்வழி என்று கிளம்பியுள்ள சில கைப்புள்ளைகளை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

இளகின இரும்பைக் கண்டால் ஓங்கி அடிப்பான் கொல்லன் என்பது போல ரஜினி என்றால் நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எழுதலாம்...யார் கேட்கப்போகிறார்கள் என்கின்ற நினைப்பு இவர்களுக்கு. (மற்ற நடிகர்கள் கதை அப்படியல்ல. ஏதாவது விழாக்களில் சம்பந்தப்பட்ட நிருபரை அந்த நடிகர்களின் தந்தைக்குலமோ அல்லது பி.ஆர்.ஒ. வோ பார்த்தால் வறுத்தெடுத்து விடுவார்கள். இதற்க்கு பயந்தே இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.)

கஞ்சன் வைத்த எச்சில் இலை விருந்து கதையாக கஞ்சனைப் பற்றி கவலைப்படாத சிலர் மட்டும் சென்று வந்த (ஏமாந்த) அந்த விருந்து ஊரிலயே பெரிய விருந்தாம். அது போல இருக்கிறது இவர்கள் வாக்கெடுப்பு நடத்தி ரஜினியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக அங்கலாய்த்து கொள்வது.

"இது ஒரு குப்பைத் தொட்டி!" என்று பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே புறக்கணித்த, குறிப்பாக ரஜினி ரசிகர்கள் முற்றிலும் புறக்கணித்த அந்த வலைத்தளம் உலகத் தமிழர்களிடம் (??!!) வாக்கெடுப்பு நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளதாம். அதன் படி ரஜினி கடந்த சில ஆண்டுகளாக மூன்றாம் இடத்திலிருக்கிறாராம். இதெப்படி இருக்கு?

"நாங்கள் ஒரு குண்டு சட்டி. இந்த குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வருபவர்களை வைத்து எங்கள் வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கிறோம்!" என்று அந்த தளம் ஒரு முன்னுரை கொடுத்துவிட்டு முடிவுகளை அறிவித்தால் நன்றாக இருக்கும்.

ஜஸ்ட் ஒரு ஆவரேஜ் வெற்றிப் படம் கொடுக்க கூட துப்பு இல்லாத நடிகர்கள் எல்லாம் அந்த வாக்கெடுப்பில் பெற்றிருக்கும் வாக்குகள் இருக்கிறதே.... அட போங்கப்பா.... அது இன்னும் பெரிய காமெடி.

………………………………………………………………………………………………………………

*This post is an outcome due to the anguish of one of our fan who told me about this.

Tom, Dick and Harry: "We are ready to gauge Rajini's fame!!"

When the whole Tamil speaking population of the globe is aware of the international acclaim of Superstar, it is really funny to see some jobless Tom, Dick and Harrys' attempts to gauge his fame by mere website voting.

"When the cat's away the mice will play". So as Superstar's tolerance to such things gives room for these crap sites to blabber like this. But this is not the case in writing about other actors. Concerned actor's papa or PRO will blast the particular writer or reporter if he is spotted in any event. So they won't dare to write like this about other actors.

The concerned Tamil website has been stamped as DUSTBIN and ignored by the common people particularly by Rajini fans long back itself and nobody cares to visit that site. But the website claims that it conducted the polls among Tamilians (??!!) all over the world and have published the results. It has expressed its concern that Superstar Rajini is trailing in the third place for the past three years. How is it? ha...ha...ha...!

It is rib-tickling to note the huge votes garnered by some actors in that poll, who are struggling to give even an average hit movie for years. Note: For years!!

………………………………………………………………………………………………………………

[END]